அமைவிடம் | - | சாத்தனூர் கல்மரப் பூங்கா |
ஊர் | - | சாத்தனூர் |
வட்டம் | - | ஆலாத்தூர் |
மாவட்டம் | - | பெரம்பலூர் |
வகை | - | கல்மரம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்மரம் |
பண்பாட்டுக் காலம் | - | தொல் பழங்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.1940 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | இந்திய புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர். எம்.எஸ்.கிருஷ்ணன் |
விளக்கம் | - | சாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரையிலும் பரவியிருந்தாக புவியியல் கூற்றுப்படி தெரியவருகிறது. புவியியல் சாத்திரப்படி க்ரிடேஷன் காலம் எனக்கூறப்படும் அக்காலத்திலும் இன்று கடலில் காணும் பிராணிகளைப் போன்று பலவித பிராணிகள் நிறைய இருந்தன. இப்பிராணிகள் இறந்த பிறகு ஆறுகளிலும் அடித்து வரப்பட்ட மணல் களிமண் இவற்றால் மூடப்பட்டக் கடலின் அடியில் அமிழ்ந்தன. கடலோரப்பகுதிகளிலும் அதன் சமீப இடங்களிலும் தழைத்து வந்த மரங்களும் ஆற்றுவெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு இப்பிராணிகளுடன் கடலில் அமிழ்ந்து காலப்போக்கில் கல்லுருவாக மாறின. இங்குக் காணப்படும் கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தய திருச்சிராப்பள்ளி பாறையினப்பகுதியில் அமைந்திருக்கின்றது. “ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் ” என இக்காலத்தில் காணப்படும் பூக்கள் தோன்றும் தாவர இனம் தோன்றியதற்கு முன்னால் பெரிதும் காணப்பட்ட அக்காலப் பூக்கள் இல்லாத (தோன்றாத) நிலத்தாவர இனமான “கோனிபர்ஸ்” வகையைச் சேர்ந்ததே இம்மரம். இங்குக் காணப்படும் கல்லுருவாகிய அடிமரம் 18 மீட்டர் நீளமுள்ளது. வரகூர், அனைப்பாடி, அலுந்தளிப்பூர், சாரதாமங்கலம் இவ்வூர்களின் அருகே நீர் ஓடைப்பகுதிகளிலும் சில மீட்டர் நீளமுள்ள இம்மாதிரியான கல்லுருவாகிய மரங்கள் காணப்படுகின்றன. இந்திய புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர். எம்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் 1940-ஆம் ஆண்டில் இக்கல்லுருவாகிய மரம் பற்றி முதல் விவரம் தெரிவிக்கப்பட்டது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் |
சுருக்கம் | - | சாத்தனூர் கல் மரம் (Sattanur) பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் உள்ளது. இவ்வூரில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இது பெரம்பலூர் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இது 1940 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் கண்டுபிடிக்கப்பட்டது. 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் கல்லாக மாறியிருக்கலாம் என நம்பப்படுகிறது, இது இந்த பகுதியில் உள்ள சுண்ணாம்புக்கல் காலத்தின் போது கடலில் இருப்பதற்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது. |